1. Home
  2. தமிழ்நாடு

எந்த ராசிக்காரர்கள் காலில் கருப்பு கயிறு கட்டக் கூடாது தெரியுமா?

1

கருப்பு கயிறு கட்டினால் காத்து கருப்பு அண்டாது என்பதம் ஐதீகம்.

கழுத்திலோ, கைகளிலோ கறுப்பு கயிறு கட்டுவதை விட கால்களில் கறுப்பு கயிறு கட்டி விடுவார்கள். சிலருக்கு இடுப்பில் அரைஞாண் கயிறு கறுப்பில் கட்டி விடுவார்கள். அதெல்லாம் சாஸ்திர சம்பிரதாயத்திற்காக செய்யப்பட்டது. பெண்கள் கொலுசு, மெட்டி அணிவதை கட்டாயமாக்கினர் நம் முன்னோர்கள்.

குழந்தைகள் பிறந்து சில நாட்களிலேயே குழந்தைக்கும், தாய்க்கும் கருப்பு கயிறு கட்டப்படும். குழந்தைகளுக்கு கண் திருஷ்டி படாமல் இருக்க, அவர்கள் கன்னத்தில் கருப்பு புள்ளி அல்லது காலில் கருப்பு கயிறு கட்டுவதை வழக்கமாக்கினர்.கறுப்பசாமி கோவில், காளியம்மன் கோவிலுக்கு சென்று பூசாரி கையால் மந்திரித்து கறுப்பு கயிறு கட்டினார்கள். இந்தக் கயிறு கட்டப்பட்ட கையிலோ, காலிலோ வேறு எந்த நிறக் கயிறும் கட்டக்கூடாது என்ற விதி உள்ளது. இன்றைக்கு இளைஞர்களும் இளம் பெண்களும் கால்களில் கறுப்பு கயிறு கட்டுவதை பேஷனாக செய்து வருகின்றனர்.

இந்த கறுப்பு கயிறு எல்லாம் கட்டலாமா? கறுப்பு கயிறு எல்லோருக்கும் நல்ல பலன்களைத் தருமா என்று பார்க்கலாம். கறுப்பு கயிறு கட்டும்போது சனிபகவானை வேண்டிக்கொண்டு காலில் கருப்பு கயிறு கட்டினால் கண்திருஷ்டி படாது. ஜோதிட சாஸ்திரத்தின்படி காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம் ராகு, கேது, சனி ஆகிய மூன்று கிரகங்களின் பலன்கள் கிடைக்கும்.

இந்த கிரகங்கள் வலிமை குறைந்து இருந்தால் அது வலிமையடையும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களில் கறுப்பு கயிறு கட்டிக்கொள்வதன் மூலம் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும். சனி பகவான் சன்னதியிலோ அல்லது சிவ ஆலயங்களுக்கோ சென்று சாமி கும்பிட்டு விட்டு சாமியின் பாதத்தில் கறுப்பு கயிறு வைத்து வழிபாடு செய்து இந்த கருப்பு கயிறு கட்டுவது நல்லது. சனிக்கிழமை அன்று வேண்டிக்கொண்டு கையில் கட்டினால் சனி பகவானின் ஆசிகள் கிடைக்கும்.

சனி பகவான் முதலில் ஒருவரது கால்களைத்தான் பிடிப்பார். எனவேதான் கால்களை சரியாக கழுவ வேண்டும் என்பார்கள். அது போல் கருப்பு கயிறை காலில் கட்டுவதன் மூலம் சனி தோஷம் நீங்கும். அத்துடன் ராகு, கேது பாதிப்புகளும் ஏற்படாது. கருப்பு கயிறு கட்டியதும் சனி பகவானின் மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும்.

அந்த கருப்பு கயிற்றில் 9 முடிச்சுகள் போட வேண்டும். கருப்பு கயிற்றை பெண்கள் இடது காலிலும் ஆண்கள் வலது காலிலும் அணியலாம். சிலருக்கு கருப்பு ஆகாவிட்டால் சிகப்பு கயிறும் கட்டுகிறார்கள். இந்த கயிறுகளால் எதிர்மறை ஆற்றல் இல்லாமல் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின்படி மகரம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் இந்த கருப்பு கயிற்றை கட்டலாம்.

ஜோதிட சாஸ்திரப்படி கருப்பு கயிறு, கருப்பு நிறம்... மகரம், துலாம், கும்பம் இவர்களுக்கு நல்லது. இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் கருப்பு நிற ஆடைகள் மற்றும் கருப்பு கயிறுகளை அணியலாம்.

விருச்சிகம் மற்றும் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு கருப்பு நிறம் ஒத்துபோகாது. ஜோதிட சாஸ்திரத்தின் படி... செவ்வாய் இந்த விருச்சிகம் மற்றும் மேஷ ராசிகளையும் கட்டுப்படுத்துகிறது. எனவே கருப்பு அவர்களுக்கு நல்லதல்ல. கருப்புக் கயிறு அணிந்தால்... மனதில் நிச்சயமற்ற நிலை ஏற்படும். உயிருக்கு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கருப்பு கயிற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விதிகள் உங்களுக்குத் தெரிந்தால், அதைப் பின்பற்றவும். கயிற்றை கழற்றுவதற்கு முன்... அதில் நான்கு முடிச்சுகள் போடவும். நாளின் ஒரு நல்ல நேரத்தில் (குறிப்பாக பிரம்மா காலத்தில்) இதைப் பயன்படுத்துங்கள். முதலில் ருத்ர காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும் அல்லது  குல தெய்வத்தை நினைத்து கட்டவும்.ஏற்கனவே கையில் மஞ்சள் அல்லது சிவப்பு கயிறு இருந்தால்... கருப்பு கயிறு அணிய வேண்டாம்.

சனிக்கிழமையில் கருப்பு கயிறு அணிவது நல்லது. சனிக்கிழமை சனிக்கு உரியது. அவருக்கு கருப்பு நிறம் பிடிக்கும். கருப்பு கயிறு அணிந்து ருத்ர காயத்ரி மந்திரத்தை உச்சரித்தல். கறுப்புக் கயிற்றின் வலிமை மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் ஜோதிட அறிஞர்கள்.

Trending News

Latest News

You May Like