1. Home
  2. தமிழ்நாடு

இந்த கோவில் பிரசாதம் என்ன தெரியுமா ? சுடசுட பிரியாணி..!

1

இந்த முனியாண்டி கோயில் தமிழகமெங்கும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து  கோயில் திருவிழாவாக கொண்டாடுவது வழக்கம்.

இந்த கோவில் திருவிழாக்களில் சுமார் 200 ஆடு 300 சேவல்கள் மக்கள் வேண்டுதல் நிறைவேற்றுதலின் பேரில் அவர்கள் நேர்த்திக்கடனாக செலுத்துவர். அனைத்தையும் ஒன்றாக பிரியாணியாக சமைத்து திருமங்கலம், கள்ளிக்குடி, வடக்கம்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த உணவினை அதிகாலை 5 மணி முதல் பிரசாதமாக வாங்கி தங்கள் வீடுகளில் எடுத்துச் செல்வார்கள்.

மதுரை மாவட்டம், வடக்கம்பட்டி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முனியாண்டி கோயில் உள்ளது.  மாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமையில் திருவிழா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் 89-வது கோயில் திருவிழா இன்று கொண்டாடப்பட்டது.

இந்த பிரியாணி திருவிழாவில் சுமார் 200 ஆடுகள் மற்றும் 300 சேவல்கள் அனைத்தையும் சுமார் 2000 கிலோ அரிசி ஒன்றாக சமைத்து அண்டாவில் வைத்து ஒவ்வொரு அண்டாவிலும் சமைத்து சுமார் 50-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் பிரியாணியை சமைத்து மக்களுக்கு பிரியாணி உணவு பிரசாதமாக வழங்கப்படும்.இந்த முனியாண்டி கோவிலில் மக்கள் என்ன வேண்டிக் கொண்டார்களோ அந்த வேண்டுதல் நிறைவேற்ற பின்பு முனியாண்டிக்கு காணிக்கையாக ஆடு, சேவல் போன்றவை நேர்த்திக்கடனாக வழங்குவார்கள்.

Trending News

Latest News

You May Like