1. Home
  2. தமிழ்நாடு

Operation Sindoor அர்த்தம் தெரியுமா? பழித்தீர்க்க மோடி பரிந்துரைத்த பெயர்!

Q

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர் இந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது
இதற்கு இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் முதல் பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் பாகிஸ்தான் அரசு சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மேலும் பஹல்காம் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே தொடர் தாக்குதலையும் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்தது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளும் தங்களின் ராணுவ பலத்தை காட்டும் வகையில் ஏவுகணை சோதனை மற்றும் படைகளை எல்லையில் குவிப்பது என மிரட்டி வந்தன. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, இந்தியன் முஜாஹிமீன் உள்ளிட்ட அமைப்புகளின் தலைமை இடங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது. இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயருக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 22ஆம் தேதி பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பெண்களின் கண்முன்னே அவர்களது கணவர்களை தீவிரவாதிகள் கொடூரமாக சுட்டுக்கொன்றனர்.
கணவர்களை கொன்று பெண்களின் குங்குமத்தை அழித்தவர்களை பழி தீர்க்கவே  ஆபரேஷன் சிந்தூர்  பெயரிடப்பட்டுள்ளது. 'சிந்தூர்' என்ற குறியீட்டுப் பெயர் குறியீட்டு மதிப்பைக் கொண்டுள்ளது. சிந்தூர் அல்லது குங்குமம் என்பது திருமணமான இந்துப் பெண்கள் பாரம்பரியமாக நெற்றியில் அணியும் ஒரு சிவப்புப் பொடியாகும். இந்து மதத்திலும் குங்குமத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
திருமண உறவை உறுதி செய்வது முதல் வெற்றியை குறிப்பது வரை அனைத்திலும் குங்குமத்தின் பங்கு பெரிது. இருப்பினும், இந்தச் சூழலில், பஹல்காம் தாக்குதலின் போது ஆண்களை குறி வைத்து கொன்று பெண்களின் குங்குமத்தை அழித்ததை இந்தப் பெயர் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. தீவிரவாதிகள் பஹல்காமில் அப்பாவிகளை கொல்வதற்கு முன்பு பெயர் மற்றும் மதத்தால் அடையாளம் கண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடுவதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களை கௌரவிப்பதையும், நீதி மற்றும் நினைவுச் செய்தியை அனுப்புவதையும் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. ராணுவ நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரை பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் தலைமையிடங்கள் மற்றும் பயிற்சி இடங்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய இந்த தாக்குதல் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like