1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க... ஆட்டின் இந்த பகுதியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போதும்..!

1

மட்டனில் நம் உடலுக்கு தேவையான புரோட்டீன், கலோரிகள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், நம் உடலுக்கு ஒரு புதுவிதமான ஆற்றலையும் தருகிறது. இதனால் தான் காய்ச்சல் உள்ளிட்ட ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட்ட பிறகு நோயுற்றவர்களுக்கு மட்டன் மிளகு சூப் செய்து தருவார்கள். 

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஆட்டு உறுப்பில் இருக்கக்கூடிய சுவரொட்டி பற்றி தெரியாது. ஆட்டு உறுப்பில் ஒன்றான மண்ணீரல் தான் சுவரொட்டி என்று அழைக்கப்படுகிறது.  

சுவரொட்டியில் நம் உடலுக்கு தேவையான பெரும்பாலான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. முக்கியமாக, நம் உடலின் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. அதாவது, அமினோ அமிலங்கள், பி12 மற்றும் இரும்பு சத்துக்கள் அடங்கியுள்ளது.

இரத்த சோகை நீங்க:
ஆட்டு சுவரொட்டியை வாரத்திற்கு ஒரு முறை நாம் உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் இரத்த சோகை நீங்கும். அதாவது, இது, ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து  ரத்த சோகை வராமல் தடுக்கிறது. எனவே, இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கல் வாரம் ஒருமுறை  இதனை உணவில் எடுத்து கொண்டால் இரத்தசோகை நீங்கும்.

மாதவிடாய் பிரச்சனை தீர்வு:
சுவரொட்டி, ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் பெண்களுக்கு மாதவிடாய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும். அதுமட்டுமில்லாமல், மகப்பேறு காலத்தில் இரத்தசோகை நோயால் பாதிக்கப்படும் பெண்கள் வாரம் ஒருமுறை சுவரொட்டி சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் இரத்தசோகை நீங்கி அதிக இரும்புசத்து கிடைக்கும்.

சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு:
சிறுநீரகம் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் சுவரொட்டி ஒரு நல்ல தீர்வாக அமையும். எனவே, சிறுநீரக நோய் உள்ளவர்கள் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சுவரொட்டியை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் சிறுநீரக பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
சுவரொட்டியில் உள்ள அமினோ அமிலங்கள், பி12 மற்றும் தாதுக்கள் உடலை தீங்கு விளைவிக்கும் நோய்களில் இருந்து பாதுகாப்பாக வைத்து கொள்கிறது. சுவரொட்டியை தொடர்ந்து வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இரும்பு சத்து அதிகரிக்க:
அமினோ அமிலங்கள், B12 மற்றும் இரும்பு சத்துக்கள் இதில் அடங்கி உள்ளன.. 50 கிராம் மண்ணீரலில் ஒரு நாளைக்கு நமக்கு தேவையான இரும்புச்சத்துக்கள் உள்ளதாம்.. அதனால், ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள், இந்த மண்ணீரலை சமைத்து சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கும்.. நோய் நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்... ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்..முடக்குவாதம் உள்ளவர்களுக்கு இது ஒரு அருமருந்து. சிறுநீரக தொற்று உட்பட, சிறுநீரக பிரச்சனைகளையும், கல்லீரல் பிரச்சனைகளையும் தடுக்கும் சக்தி இந்த ஆட்டு மண்ணீரலுக்கு உண்டு.. வாய்ப்புண்‌, வயிற்றுப்புண்‌களை ஆற்றக்கூடியது இந்த சுவரொட்டி..

Trending News

Latest News

You May Like