1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு..!

1

ஒவ்வொரு பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படும்.

இந்நிலையில் மத்திய அரசு, ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. ஆம், நீங்க கேட்டது சரிதான். அது எறும்பு சட்னி தான்! நம்மைப் பொறுத்தவரை எறும்புகளைக் கண்டால் ஓடுவோம் அல்லது சாகடிப்போம். ஆனால் பழங்குடியினர் சிவப்பு எறும்புகளையும் அதன் முட்டைகளையும் சேகரித்து, உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து சட்னியாகச் சாப்பிடுகிறார்கள். 

இந்த சட்னி நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சுறுசுறுப்பை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.சிவப்பு எறும்புகளை பயன்படுத்துவதற்கு முன்பு சுத்தம் செய்யப்பட்டு உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் கலவையை சேர்த்து அரைத்து சட்னியாக தயாரிக்கப்படுகிறது. ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற பிற கிழக்கு மாநிலங்களிலும் இந்த சட்னியை சாப்பிடுகிறார்கள்.சிவப்பு எறும்பு சட்னியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் புரதம், விட்டமின் பி12, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளது.

Trending News

Latest News

You May Like