1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? வெந்தய நீரை அடிக்கடி குடித்து வர உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும்..!

1

வெந்தய நீரைக் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன, அதை எப்போது குடிக்க வேண்டும் என்பது குறித்து இங்குத் தெரிந்து கொள்வோம்.

உடலில் உள்ள நச்சுக்கள் நீங்க :

வெந்தய நீரை அடிக்கடி குடித்து வர உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். இந்தத் தண்ணீரைக் குடிப்பதன் மூலம், உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். தினமும் காலையில் வெந்தய நீரைக் குடிப்பதன் மூலம், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

செரிமானம் மேம்படும் :

வெந்தய நீர் செரிமான அமைப்பை வலுப்படுத்த ஒரு சர்வரோக நிவாரணியாகச் செயல்படுகிறது. இது வயிற்றை சுத்தப்படுத்துகிறது. வெந்தய தண்ணீரை குடிப்பது மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. எனவே இந்தப் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வெந்தய நீரை எடுத்துக் கொள்ளாலாம்.

உடல் எடையைக் குறைக்க :

வெந்தயம் எடை இழப்பில் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் வெந்தயம் மற்றும் பெருஞ்சீரக தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் பருமனை விரைவாகக் குறைக்க முடியும். வெந்தய நீரை மறுநாள் காலையில் குடித்து விட்டு அந்த விதைகளை நன்கு மென்று சாப்பிட்டு வாருங்கள் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

வெந்தய நீரை எப்படி தயாரிப்பது?

ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, வெந்தய விதை நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், குறிப்பாகக் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும்போது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைச் செய்கிறது. வெந்தய நீரை தயாரிக்க, இரவில் ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரில் ஒன்று முதல் ஒன்றரை டீஸ்பூன் வெந்தய விதைகளை ஊறவைக்கவும்.

காலையில் எழுந்தவுடன், இந்தத் தண்ணீரை நன்றாக வடிகட்டி, பின்னர் வெறும் வயிற்றில் குடிக்கவும். நீங்கள் விரும்பினால், பின்னர் வெந்தய விதைகளையும் சாப்பிடலாம். காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீரைக் குடிப்பதால் உடல் சூடும் குறையும்.

வெந்தயம் சூடாக இருப்பதால், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே அதை உட்கொள்ள வேண்டும்.

Trending News

Latest News

You May Like