1. Home
  2. தமிழ்நாடு

எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வி கண்டார் தெரியுமா ?

1

கோவை நாடாளுமன்ற தொகுதியில் மும்முனை போட்டி நிலவி வந்தது. அதாவது அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் மற்றும் பாஜக சார்பில் அண்ணாமலை 26 சுயேட்சைகள் உட்பட 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கோவை நாடாளுமன்ற தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியது.கோவை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டன.

முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 7,312 அஞ்சல் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் 656 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாருக்கு 2,772 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு 2,524 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரனுக்கு 887 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் கலாமணி ஜெகனுக்கு 270 வாக்குகளும் பதிவாகியிருந்தது.

அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. மொத்தம் 24 சுற்றுகளாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றிலிருந்து இறுதிச் சுற்றான 24-வது சுற்றுவரை திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாரே அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இறுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கணபதி ராஜ்குமார் வாக்கு எண்ணிக்கை முடிவில் 5,68,200 வாக்குகள் பெற்று அபார வெற்றிப் பெற்றுள்ளார். இரண்டாமிடத்தை பிடித்த அண்ணாமலை 4,50,132 வாக்குகளும், மூன்றாமிடத்தை பிடித்த அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகளும் பெற்றனர். அதன்படி அண்ணாமலை 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியை சந்தித்துள்ளார். 

Trending News

Latest News

You May Like