1. Home
  2. தமிழ்நாடு

அய்யா வைகுண்டர் வரலாறு பற்றி தெரியுமா ?

1

கிருந்து தவம் செய்ய குமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்புக்கு வந்துள்ளார். இவர் அவதாரம் எடுத்து வந்த காலத்தில், அடக்குமுறைகள் அதிகமாக இருந்து வந்துள்ளது. கீழ் சாதி என்று முத்திரை குத்தப்பட்டவர்கள், முழங்காலுக்குக் கீழ் வேட்டி அணியக்கூடாது, தலைப்பாகை அணியக்கூடாது. பெண்கள் மேலாடை அணியக்கூடாது என பலவிதமான கட்டுப்பாடுகள் அப்போதைய அரசாட்சியில் இருந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் சாமி தோப்புக்கு வந்த அய்யா வைகுண்டர் ஆறு வருடங்கள் சிவனை நோக்கி தவம் இருந்துள்ளார். அய்யா வைகுண்டரை அனைத்து தரப்பு மக்களும் தேடிவந்து பார்த்து ஆசீர்வாதம் பெற்றனர். தன்னை நாடிவந்த பக்தர்களின் மனதில் ஒற்றுமையை இவர் ஏற்படுத்தினார். அனைத்து சாதி மக்களும் ஒரே கிணற்றில் குடிக்கவும், குளிக்கவும் வேண்டும், தன்னை நாடிவரும் பக்தர்களில் ஆண்கள் தலைப்பாகை அணிய வேண்டும் என்றும் பெண்கள் சீலை அணிய வேண்டும் என்றும் போதித்துள்ளார்.

இதனையடுத்து அவர், சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு இன்னல்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட்டர். அதன் பிறகு சாமி தோப்புக்கு வந்த அய்யா வைகுண்டர், மக்களைத் திரட்டி மக்களின் வழிபாடு முறைகளை மாற்றி புரட்சிகளை ஏற்படுத்தினார். எனவே, பக்தர்கள் அவரை வழிபட்டு வருகின்றனர்.

அய்யா வைகுண்டரின் 193 வது அவதார தினம்: அய்யா வைகுண்டரின் தலைமை பதி கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மாசி 20ஆம் தேதி சாமி தோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினவிழா இன்று (மார்ச் 4) கொண்டாடப்படுகிறது.

Trending News

Latest News

You May Like