1. Home
  2. தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பு..!

அரசு ஊழியர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பு..!


‘அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள் வரும் பிப்ரவரியில் நடத்தப்படுகிறது; இதற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம்’ என, டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி-யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள் இந்த ஆண்டு முதல் கணினி வழி தேர்வாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, துறை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் தங்கள் ஆதார் விவரங்களை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு டிசம்பரில் நடத்த வேண்டிய துறை தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் 9ம் தேதி வரை நடத்தப்படும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது. வரும் டிசம்பர் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கொள்குறி வகையில் சரியான விடையை தேர்வு செய்யும் ‘அப்ஜெக்டிக்’ வினாத்தாளுக்கு ஆன்லைன் வழியில் தேர்வு நடத்தப்படும்.

அதேநேரம், விரிவாக பதில் எழுத வேண்டிய தேர்வுகளுக்கு, வழக்கம்போல எழுத்துத் தேர்வாகவே நடத்தப்படும். துறை தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்ட விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி. www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன” என அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like