தி.மு.க இளைஞரணி மாநாடு 21-ம் தேதி நடைபெறும் : தலைமை கழகம் அறிவிப்பு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/fe6bab215a9fccddce71792918e95030.jpg?width=836&height=470&resizemode=4)
தமிழகத்தில் மிக்ஜாம் புயல், தென் மாவட்ட வெள்ள பாதிப்பு காரணமாக தி.மு.க. இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு 2024-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட முகப்பு தோற்றத்துடன் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பந்தல் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1.5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக ஒரு கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சேலத்தில் நடைபெறவுள்ள மாநாடு தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் மாநாடாக நடப்பதால், இளைஞர்களே உரிமைகளை வென்றெடுக்க ஒன்று திரள்வோம்.
மத்திய அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய நிதி உரிமை , கல்வி உரிமை ஆகியவற்றை மீட்டெடுக்கும் மாநாடாக இம்மாநாடு அமைய வேண்டும். எனவே, அனைத்து நிர்வாகிகளும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தோடு பங்கேற்று மாநாட்டை வெற்றிகரமாக வழி நடத்த வேண்டும் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.