1. Home
  2. தமிழ்நாடு

தி.மு.க. இளைஞரணி மாநாடு தொடங்கியது!

1

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் 2- வது மாநில மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டக் கொடிக் கம்பத்தில் தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. மற்றும் தி.மு.க. இளைஞரணியின் மாநிலச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மாநாட்டைத் தொடங்கி வைத்தார் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி.

அதைத் தொடர்ந்து, மாநாட்டு திடலில் உள்ள பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். பின்னர், மாநாட்டு நடைபெறும் அரங்கத்திற்குள் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநாட்டிற்கான ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் தி.மு.க. மாநாட்டில் குவிந்து வருகின்றனர். தி.மு.க.வினருக்கு வழங்குவதற்காக மட்டன் பிரியாணி, சிக்கன் 65 மற்றும் சைவ உணவும் தயார் செய்யப்பட்டு வருகின்றது.

Trending News

Latest News

You May Like