திமுக மூத்த தலைவர் மருத்துவமனையில் அனுமதி!
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொன்முடிக்கு பித்தப்பையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பித்தப்பை பிரச்னை காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்றும், அறுவை சிகிச்சைக்கு பிறகு சரியாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, அவர் பிப்ரவரி 6ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
newstm.in