தி.மு.க. 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மண்டலங்கள் வாரியான 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியது.
தெற்கு மண்டல தி.மு.க.நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதில், கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தெற்கு மண்டலத்தில் கட்சி வளர்ச்சிப் பணி, விரைவில் வரஉள்ள சட்டமன்றத் தேர்தல், அதற்கான முன்னேற்பாடு பணிகள் உள்ளிடவைகளை விரைவுபடுத்துவது மற்றும் கட்சியினரிடையே ஒற்றுமையை அதிகரிப்பது போன்றவை குறித்தும் நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடி வருகிறார்.