1. Home
  2. தமிழ்நாடு

பாராளுமன்ற இரு அவைகளில் இருந்தும் தி.மு.க எம்.பி.க்கள் வெளிநடப்பு..!

1

நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடரான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1-ம் தேதி மத்திய அரசின் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பிப்ரவரி 10-ம் தேதி சனிக்கிழமையான நேற்று வரை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. கடந்த சில நாட்களாக பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே மசோதாக்கள் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை மக்களவையில் கடந்த 3 நாட்களுக்கு முன் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வெள்ளை அறிக்கை மீதான விவாதமும் நடைபெற்றது.

பட்ஜெட் கூட்டத்தொடரில் கடைசி நாளான நேற்று வெள்ள பாதிப்பு குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்பி திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்திருந்தார். தொடர்ந்து பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையில் இருந்து நேற்று திமுக வெளிநடப்பு செய்துள்ளது. இந்நிலையில்,  தமிழ்நாட்டுக்கு புயல், வெள்ள நிவாரண நிதி வழங்காததை கண்டித்தும், மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாநிலங்களவையில் இருந்தும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர்.

Trending News

Latest News

You May Like