மாநகராட்சி கூட்டத்தில் திமுக-பாஜக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்!

மாநகராட்சி உறுப்பினர் உமா ஆனந்தின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு பாஜகவைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் கேள்வி விவாதத்தின் போது, இது போன்று விவகாரங்களை எழுப்பக்கூடாது என்று மாநகராட்சி துணை மேயர் அறிவுறுத்தினார். ஆனால், இதையும் மீறி திமுக, பாஜக உறுப்பினர்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம், மாநகராட்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் இடையே முகச் சுழிப்பை ஏற்படுத்தியது.
அண்மையில் மதுரைக்கு வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹரியானா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இதேபோல, தமிழகத்திலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து முட்டாள்தனமானது. மேலும், மத்திய உள்துறை அமைச்சர் ஒரு முட்டாள் என்று தெரிவித்திருந்தார்.
திமுக எம்.பி. ஆ.ராசாவின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு, பாஜகவைச் சேர்ந்த மூத்த கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தான் சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் பாஜக உறுப்பினர் உமா ஆனந்த் கண்டனம் தெரிவித்து பேசியது குறிப்பிடத்தக்கது.இதனிடையே சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில், சென்னை பட்டினம்பாக்கம் டிமான்டி சாலைக்கு மறைந்த தமிழ் பாடகர் எம்.எஸ்.விஸ்வநாதன் பெயரை சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட சுமார் 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.