இடைத்தேர்தலை புறக்கணிக்கும் தேமுதிக..?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.
ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா என்ற கேள்வி எழுந்ததால், இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாகவும், உழைப்பு, நேரம். பணம் விரயம் செய்ய விரும்பவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்த நிலையில், அக்கட்சியின் கூட்டணியில் உள்ள தேமுதிகவும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது.