தமிழக முதல்வர் ஸ்டாலின் - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திடீர் சந்திப்பு..!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அண்மையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதல்-அமைச்சரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். முதல்-அமைச்சரின் சகோதரர் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க பிரேமலதா நேரில் சென்றார்.
இந்த சந்திப்பின்போது, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், தேமுதிகவின் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். யாருடன் கூட்டணி என தேமுதிக முடிவு செய்யாத நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.