ஜனநாயகம் கேள்விக்குறியாகி விட்டதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் - தேமுதிக அறிவிப்பு..!
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்றைய ஆட்சியாளர்களின் கரங்களில் தேர்தல் என்கிற ஜனநாயகம் மிகப்பெரிய கேள்விக்குறியாகிறது. இடைத்தேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் விரயம் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததையடுத்து அந்த தொகுதி காலியானது. இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. களம் இறங்கியுள்ளது. பா.ம.க. வேட்பாளராக சி. அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தே.மு.தி.க. தற்போது, அ.தி.மு.க.வை பின்பற்றி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.