1. Home
  2. தமிழ்நாடு

கர்நாடகாவில் நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் : டி.கே.சிவகுமார் அறிவிப்பு..!

1

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக விவசாயிகள், அரசியல் தலைவர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் தண்ணீர் திறப்பை நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று துணை முதல்வர்  டி.கே. சிவகுமார் அறிவித்துள்ளார்.  இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் வரும் 23-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். அடுத்தக் கட்ட நடவடிக்கை பற்றி அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகத்தில் மழை குறைவு காரணமாக இங்குள்ள விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற கடினமான சூழ்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்க வேண்டியது அரசின் கடமை. சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கை எதிர்கொள்ள உரிய வாதங்களுடன் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

தமிழகத்திற்கு நீர் வழங்க கர்நாடக பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Trending News

Latest News

You May Like