1. Home
  2. தமிழ்நாடு

தமிழிசைக்கு திவ்யா சவால்: முடிந்தால் புள்ளிவிபரத்துடன் தாக்கல் செய்யுங்கள்..!

1

திமுக சார்பில் சென்னையில்  பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் திமுக அணி துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ் கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், 

எங்களுடைய கட்சி கொடி எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும்.தங்களுடைய கட்சியை காரில் முன்பக்கத்தில் பறக்க விட்டு சென்று அவர்கள் செய்யும் தவறுகளுக்கு திமுக தான் என்று குற்றம் சாட்டுவது நியாயமற்றது என்று கூறினார்.இன்றைய காலகட்டத்தில் எதிர்கட்சிகள் அனைவரும் எந்த தவறு நடந்தாலும் அது ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவை தான் குற்றம் சாட்டுகின்றன.அதைத்தான் அவர்கள் ஃபேஷனாக வைத்திருக்கிறார்கள் என்று கூறி அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை திவ்யா சத்யராஜ் மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.

குறிப்பாக சொன்னால் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் திமுக ஆட்சியை விட்டு விரட்டும் வரை தான் செருப்பு அணிய மாட்டேன் என்று கூறியிருந்தார். அப்படி அவர் செருப்பு அணியாமல் சென்று காலில் முள் ஏதேனும் குத்தியிருந்தால் கூட அது திமுக தான் காரணம் என்று கூறியிருப்பார்.


தலைவலி , காய்ச்சல் வந்தாலும் திமுக தான் தவறு செய்வதாக சிலர் கூறுவதாக மறைமுகமாக எதிர்க்கட்சியினரை விமர்சித்தார். மேலும், "இதற்கெல்லாம் கவலைப்படுகிற ஆட்கள் நாங்கள் கிடையாது. எங்களுக்கு மக்கள் பணி செய்வதே ஒரே வேலை" என்று திவ்யா சத்யராஜ் கூறினார்.


தொடர்ந்து பேசியவர், மக்கள் பணத்தை சூறையாடுவதாகவும் ஊழல் செய்வதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் குற்றம் சாட்டுகிறார். இதற்கு முடிந்தால் புள்ளிவிபரத்துடன் அடுத்த செய்தியாளர் சந்திப்பில் தாக்கல் செய்யட்டும் என்றும் திவ்யா சத்யராஜ் சவால் விடுத்தார்.

மேலும், மக்கள் ஆட்சி எது மன்னர் ஆட்சி எது என்று தெரியாதவர்கள் அரசியலுக்கு தகுதி கிடையாது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை சாடினார். மேலும் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் சிலர் தன்னுடைய கட்சி நிர்வாகிகளை கேவலமாக பேசி வருவதாக கூறினார்.

Trending News

Latest News

You May Like