1. Home
  2. தமிழ்நாடு

பாஜகவிலிருந்து மாவட்டச் செயலாளர் விலகல்!!

பாஜகவிலிருந்து மாவட்டச் செயலாளர் விலகல்!!


கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காத திமுக என்று கூறி தடாலடியாக பாஜகவில் இணைந்து போட்டியிட்டார் டாக்டர் சரவணன்.. மதுரை மாநகர பாஜக மாவட்டச் செயலாளாராகவும் பொறுப்பேற்றார்.

காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசினர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று தனது வருத்தத்தை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். மதுரையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்த பின் அவரது வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் பேசியதாவது,

“எனக்கு வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை. எனது மனதில் உள்ள விஷயத்தை அமைச்சரிடம் தெரிவித்தேன். நான் பாஜக கட்சியில் தொடரவில்லை. பாஜகவில் நான் தொடரப்போவதில்லை. இன்று காலை ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன். சுயமரியாதையுடன் இருக்க வேண்டும். திமுகவில் இணைவது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை. இது குறித்து செய்தியாளர்களிடம் சொல்லாமல் செய்யமாட்டேன். (திமுகவில் இணைந்தாலும் தப்பில்லை. திமுக தாய் வீடு தானே. 10-15 ஆண்டுகளாக நான் உழைத்த கட்சி திமுக” என்றார்.

டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அவர் மீண்டும் திமுகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரின் படிவத்தில், அப்போது மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா போட்ட கைநாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சுயநினைவு இல்லாத நிலையில், ஜெயலலிதாவுக்குத் தெரியாமலே அவருடைய கைநாட்டு பெறப்பட்டுள்ளது என்று டாக்டர்.சரவணன் வழக்கு தொடர்ந்திருந்தார். திமுகவை விட்டு சரவணன் விலகி பாஜகவில் சேர்ந்த பிறகு அந்த வழக்கு விசாரணை தடைபட்டு, இன்னும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவில் டாக்டர். சரவணன் இணைந்தால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Trending News

Latest News

You May Like