நாளை தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..!

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற இருக்கும் நிலையில், கட்சிக்கு இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை.
விஜய் மக்கள் இயக்கத்தில் பொறுப்பு வகித்தவர்களே தற்போது மாவட்ட தலைவர்களாகத் தொடர்ந்து வருகிறார்கள். எனவே கட்சிக்குப் புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்கக் கடந்த சில மாதங்களாக நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நாளை (ஜனவரி 10) தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.