பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம்.. நேரில் வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்..!
ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான சில மாதத்திலேயே ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ரோஹித்துடன் சேர்ந்து வாழவில்லை.
மகளின் வாழ்க்கை இப்படியானதை நினைத்து வருத்தப்பட்ட ஷங்கர், ரோகித்திடம் இருந்து தனது மகளுக்கு முறையாக விவாகரத்தை பெற்றார். இதையடுத்து, தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்த ஷங்கர், தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த தருண் கார்த்திகேயன் மருமகனாக்கி உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் பிப்ரவரி மாதம் மிகவும் எளிமையாக நடைபெற்றது.
மகளின் நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்துவிட்டதால், திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தனது மனைவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்தார்.
இந்நிலையில், ஐஸ்வர்யாவுக்கும் ஷங்கரின் துணை இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது.இந்த விழாவில் நேரில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமண தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தார்..
சென்னையில் நடைபெற்ற திரைப்பட இயக்குநர் திரு. சங்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யா சங்கர் - தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். pic.twitter.com/Pepl3brIF4
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 15, 2024