1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ?ஆதார் கார்டை பயன்படுத்தி கடன் பெறலாம்..! அதுவும் ரூ.2 லட்சம் வரை கிடைக்கும்..!

1

ஆதார் கார்டை பயன்படுத்தி கடன் பெறுவது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

தனிநபர் கடனில் குறைந்த தொகையினை கூட கடனாக பெறலாம். அத்துடன் குறுகிய காலத்தில் கடனை திரும்ப செலுத்துவது மற்றும் உடனடியாக பணம் கிடைக்கும் வசதி ஆகியவை தனிநபர் கடனில் உள்ளது. இதுபோன்ற பல்வேறு வசதிகள் இருப்பதால் தனிநபர் கடனை பலரும் வாங்குகின்றனர். பொதுவாகவே வங்கிகள், நிதி நிறுவனங்கள் என எங்கு கடன் வாங்கினாலும், அதற்கு சில ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

இந்நிலையில் ஆதார் எண்ணை பயன்படுத்தி கடன் பெறும் வசதியை வங்கிகள், நிதி நிறுவனங்கள் கொண்டு வர துவங்கியுள்ளன. ஆதாரை பயன்படுத்தி கடன் பெறும் போது, அதற்கான செயல்முறை மிகவும் சுலபம். ஆதார் அட்டையை பயன்படுத்தி ரூ. 2 லட்சம் வரை கடன் பெறலாம். இது உடனடியாக பணம் தேவைப்படுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

ஆதார் அட்டை மூலமாக கடன் பெறுவது என்பது மற்ற வகையில் கடன் பெறுவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. வருமானச் சான்று, முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று போன்ற அடிப்படை ஆவணங்கள் எதுவும் இல்லாமல், ஆதார் அட்டை கடன்கள் எளிமையானவை. மேலும், பேப்பர் வேலைகளும் இதில் கிடையாது. இதனால் அலையவும் தேவையில்லை.

ஆதார் கடன்கள் முற்றிலும் டிஜிட்டல் செயல்முறையை சார்ந்தவை. ஆன்லைனிலே இந்த கடனை பெறலாம். ஆதாரை பயன்படுத்தி வாங்கப்படும் தனிநபர் கடனுக்கு எந்த விதமான பிணையமும் தேவையில்லை. ஆதார் அட்டையை பயன்படுத்தி ரூ. 2 லட்சம் கடன் பெறுவதற்கு விண்ணப்பித்தாரர் 21 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் சில தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். அதன்படி விண்ணப்பத்தாரர் மாத வருமானம் குறைந்தபட்மாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரைக்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் பெறுபவர்கள் மற்றும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த வருமான நிர்ணயம் பொருந்தும். அத்துடன் விண்ணப்பத்தாரரின் கிரெடிட் ஸ்கோர் 650-700 முதல் அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.

அவ்வாறு இருக்கும் போது தான் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருக்கும். செயல்பாட்டில் இருக்கும் ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு தான் கடனுக்கு விண்ணப்பிக்கும் முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

கடன் வழங்கும் வங்கிகளின் இணையதளம் அல்லது மொபைல் செயலியில் லோன் பெறுவதற்கான தகுதி உள்ளதா என பார்க்க வேண்டும். கடன் வழங்கும் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட எலிஜிபிலிட்டி கால்குலேட்டர் முலமாக நீங்கள் இதை செக் செய்ய முடியும். ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆதார் அட்டை பயன்பாட்டில் இருக்க வேண்டும். மேலும் ஆதார் அட்டை உங்களின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வட்டி எவ்வளவு?:

தனிநபர் கடன்கள் என்பது பாதுகாப்பற்றவை (unsecured). எனவே, கிரெடிட் ஸ்கோர், வருமானம், கிரெடிட் வரலாறு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்படும். எனவே, கடன் பெறுவதற்கு முன்னால் வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 

என்னென்ன ஆவணங்கள் தேவை: ஆதார் கார்டு, பான் கார்டு, வருமானத்திற்கான சான்று ஆகியவற்றை அப்லோடு செய்ய வேண்டும். நீங்கள் ஆவணங்களை சமர்பித்த பிறகு உங்கள் லோன் அப்ரூவ் ஆகிவிடும். நிராகரிக்கப்படுவதாக இருந்தால் 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் தெரிந்துவிடும்.

Trending News

Latest News

You May Like