இந்த பாடலில் விஜய் அஜித்தை தாக்கினாரா? - ஓப்பனாக பேசிய சச்சின் டைரக்டர்..!

சச்சின் திரைப்படம் வெளியான சமயத்தில் அஜித்திற்கும் விஜய்க்குமான மோதல் போக்கு உச்சக்கட்டத்தில் இருந்தது.இதனை வெளிப்படுத்தும் விதமாக இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களின் வசனங்களின் வாயிலாகவும், பாடல் வரிகள் மூலமாகவும் மோதிக்கொண்டனர். இதனால், சச்சின் படத்தின் ஓப்பனிங் பாடலான வா வா என் தலைவா பாடலிலும் அஜித்தை தாக்கி பாடல் வரிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அதற்கு படத்தின் இயக்குநர் ஜான் மகேந்திரன் பதில் கொடுத்திருக்கிறார். இது குறித்து யூடியூப் தளத்திற்கு கொடுத்த பேட்டியில், ‘ஓஷோவை படித்தவர்களுக்கு நான் சொல்வது எவ்வளவு உண்மை என்பது நன்றாகவே புரியும். சச்சின் கேரக்டரை நான் வடிவமைத்ததே ஓஷோ கூறிய கருத்துக்களின் வழியாகத்தான்..
ஏன் வாழ்க்கையை ஒரு பக்கமாகவே பார்க்க வேண்டும். அதை வேறொரு பக்கமாக பார்க்கலாம் என்பதுதான் அதனுடைய ஐடியா... வா வா என் தலைவா பாடல் முழுக்க முழுக்க ஓசோவின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வழியாகத்தான் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் பாடலாசிரியரிடம் கூறும் பொழுதும், இது ஓசோவின் தாக்கத்திலிருந்து எழுதப்பட வேண்டும் என்று கூறியே பாடலையும் வாங்கினேன்.
அதில் அஜித் சாரை தாக்கி எழுத வேண்டும் என்றெல்லாம் நாங்கள் திட்டமிடவே இல்லை. படத்தின் கேரக்டர் ஒரு இடத்தில் மற்றவர்களை துன்புறுத்தாத எந்த இன்பமும் சரிதான்; ஆனால், மற்றவரை துன்புறுத்தக் கூடிய ஒரு சின்ன புன்முறுவல் கூட மிகப் பெரிய தவறு என்று கூறும்..
அப்படி இருக்கும் பொழுது, படம் எடுக்கக்கூடிய நாங்கள் எப்படி அதைச் செய்வோம். அந்த படத்தில் அஜித்தை தாக்க வேண்டும் என்று நாங்கள் எந்த வரியையும் வைக்கவில்லை.
சச்சின் கதாபாத்திரம் எவ்வகையில் வெளிப்படுத்தப்பட வேண்டுமோ அதனை மனதில் வைத்துதான் அந்த மாதிரியான வரிகளை நாங்கள் பயன்படுத்தினோம்.. அந்த நேரத்தில் பாடல் வரிகள் அஜித்தை தாக்குவதை போல இருக்கிறது என்று யாரும் என்னிடம் சொல்லவும் இல்லை; எனக்கும் அது குறித்தாலும் கவனமும் இல்லை.அந்த சமயத்தில் அஜித் வேறொரு படத்தில் இப்படியான வரிகளை பயன்படுத்தி இருக்கிறார். நாம் இந்த படத்தில் இப்படி பயன்படுத்துகிறோம் இது அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருக்கிறது என்றெல்லாம் யாராவது கூறி இருந்தால், நிச்சயமாக அந்த வரிகளை நான் வைத்திருக்கவே மாட்டேன். சச்சின் கதாபாத்திரம் படம் முழுக்க எப்படி இருக்க போகிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக தான் அந்த பாடல் வரிகள் எழுதப்பட்டதே தவிர உள்நோக்கம் எதுவும் இல்லை’ என்று பேசினார்.