1. Home
  2. தமிழ்நாடு

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள்..!

Q

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நாள்தோறும் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடற்கரையில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

மேலும், கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, கோயிலின் உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுவதால், நான்கு ரத வீதிகளில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like