“டிராக் அழகர்” செயலியை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை..!

மதுரை சித்திரைத் திருவிழா, வரும் ஏப்ரல் 29 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 15 நாட்கள் நடைபெறுகிறது.கடந்த ஆண்டு 25 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் மேலான கூட்டம் வரலாம் என மதுரை மாநகராட்சி கணிக்கிறது.
இந்த நிலையில் மதுரை மக்களிடம் இருந்தும், பக்தர்களிடம் இருந்தும், பண்டிகை நாள்களில் கள்ளழகர் எதிர்சேவை, அம்மன், சுவாமி உலா போன்ற நிகழ்ச்சிகளில், அழகரின் இருப்பிடத்தை நேரடியாக காண ‘டிராக் அழகர்’ என்ற ஜிபிஎஸ் வசதியுள்ள மொபைல் செயலியை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.