பக்தர்கள் அதிர்ச்சி..! கோவில் தேர் கவிழ்ந்து விபத்து..!
ஈரோடு அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் பொன்மலை ஆண்டவர் கோயிலில் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் தேர் வளைவில் திரும்பும் போது, சாலையோரம் இருந்த குழியில் தேரின் சக்கரங்கள் இறங்கியதால் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது.
தேர் கவிழ்வதை பார்த்து பக்தர்கள் அலறியடித்து ஓடியுள்ளார். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.