1. Home
  2. தமிழ்நாடு

பக்தர்கள் ஷாக்..! மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மின்சாரம் வழங்க முடியாது!

1

சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முறையில் நடைபெறும். நடப்பாண்டிற்கான சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் விழா நடைபெறவுள்ளது. இதில்,
 

சித்திரை திருவிழா நிகழ்வுகள்

  • மே 6 - மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம்,
  • மே 8 - மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்,
  • மே 9 - மீனாட்சியம்மன் கோவில் திருத்தேரோட்டம்
  • மே 11 - கள்ளழகர் எதிர்சேவை,
  • மே 12 - கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு
  • மே 13 - மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு, நள்ளிரவில் தசாவதாரம்
  • மே 14 - தல்லாகுளம் பகுதியில் பூப்பல்லக்கு
  • மே 15 - அழகர்மலைக்கு புறப்பாடு
 

மதுரை ஆட்சியர் ஆய்வுக் கூட்டம்

இந்த சூழலில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், வைகையாற்று பகுதி, கோரிப்பாளையம், செல்லூர் ஆகிய பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெறுகின்றன. அங்கெல்லாம் கூடுதல் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டார்.

 

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை ஒட்டி மே 8 முதல் வைகை அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது என்று பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி அம்மன் கோயில் மாசி வீதிகளில் சுவாமி 15 நாட்கள் வீதி உலா வரும்.


திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். அப்போது பல்வேறு தேவைகளுக்காக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த சூழலில் மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மாநகராட்சிக்கு மின் கட்டண நிலுவைத் தொகை உள்ளது என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். எனவே நிலுவைத் தொகையை செலுத்தினால் மட்டுமே நடப்பாண்டு விழாவிற்கு மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இல்லையெனில் தற்காலிக மின் இணைப்பைப் பெற்று அதன்மூலம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like