1. Home
  2. தமிழ்நாடு

பெண் கடத்தல் புகாரில் தேவகவுடாவின் மகன் ஹெச் டி ரேவண்ணா அதிரடி கைது..!

1

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் எம்.பி.,யுமான‌ 33 வயது பிரஜ்வல் ரேவண்ணா 400க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதுமட்டுமின்றி அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளார் பிரஜ்வல் ரேவண்ணா.

சுமார்3000 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கர்நாடக அரசியலை அதிர வைத்தது. ஹாசன் தொகுதி எம்பியான பிரஜ்வல் தற்போது அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 26 ஆம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபற்ற அன்றே பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வன்கொடுமை வீடியோக்கள் வெளியாகின.

25 வயதான பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் தலைமறைவானார் பிரஜ்வல். அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் வெளிநாடு செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்தது.

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் பேரனும் ஹாசன் தொகுதி மதச்சாா்பற்ற ஜனதா தள (மஜத) எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது தொடர்ந்து பல பெண்களும், பெண்களின் சார்பாக அவர்களது மகன் உள்ளிட்டோரும் புகார் அளித்து வருகிறார்கள். அது தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் பதிவு செய்து வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரில், ஹொளே நரசிப்புரா காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்விவகாரம் தொடா்பாக சிறப்பு விசாரணைப் பிரிவு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையும் எம்எல்ஏவுமான ரேவண்ணா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ஹெச்டி தேவகவுடாவின் மகனான ரேவண்ணா, கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சராக இருந்தவர்.இவரும் இவரது நெருங்கிய உதவியாளரான சதீஷ் பாபண்ணா ஆகிய இருவர் மீதும் பெண் கடத்தல் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தியதற்காக அவரது வீட்டின் முன்னாள் பணிப்பெண்ணை கடத்தியதாக இருவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.

தனது மகனுக்கு எதிராக புகார் அளித்ததால் ரேவண்ணா, அந்த பெண்ணை தனது ஆட்களை வைத்து கடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேவண்ணாவின் நண்பர் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அடைத்த வைக்கப்பட்ட அந்த பெண்ணை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக ரேவண்ணா மற்றும் சதீஷ் மீது பெண் கடத்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திடீர் திருப்பமாக அவரது தந்தையும் எம்எல்ஏவுமான ரேவண்ணாவ சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வரும் 7 ஆம் தேதி கர்நாடாகவில் எஞ்சியுள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்த விவகாரம் ஜேடிஎஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like