பாஜகவிடம் இருந்து ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/ca2d770e46df0371fd5b7b054d48219d.jpeg?width=836&height=470&resizemode=4)
பாஜகவிடம் இருந்து ஜனநாயகத்தை உச்சநீதிமன்றம் காப்பாற்றியுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பஞ்சாப் தேர்தல் முறைகேடு தொடர்பாக பேசிய அவர், சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகத்தை உச்சநீதிமன்றம் காப்பாற்றியுள்ளது.
மோடி-அமித்ஷாவின் அதிகார வெறிக்கு இந்த தீர்ப்பின் மூலம் சவுக்கடி விழுந்துள்ளது. ஜனநாயகத்தை நசுக்கும் பாஜகவின் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் தடை போட்டுள்ளது எனத் தெரிவித்தார்.