1. Home
  2. தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் நாளை ஆய்வு! மத்திய குழு வருகை!

டெல்டா மாவட்டங்களில் நாளை ஆய்வு! மத்திய குழு வருகை!


டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசு கோரிக்கையை ஏற்று, ஆய்வு செய்ய மத்திய அரசு குழு நாளை தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

தஞ்சை திருவாரூர் நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது நெல்அறுவடையும் கொள்முதல் பணியும் மும்முரமாக நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தில் பங்கெற்ற நுகர்பொருள் வாணிபகழக நிர்வாக இயக்குனர் சுதாதேவி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து மார்ச் 30-ம் தேதி வரையில் 17 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலும் ஏப்ரலில் இருந்து செப்டம்பர் 30 வரைக்கும் 23 லட்சம் மெட்ரிக் டன்னும் என மொத்தம் 40 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு வைத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது, குறுவையில் தற்போது 77 சதவிகிதம் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இன்னும் 90 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய வேண்டி உள்ளதாகவும் தெரிவித்த அவர், 1000 மூட்டைகளுக்கு மேல் வரத்து உள்ள 25 இடங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

மேலும், தொடர் கனமழைபெய்து வருவதால் ஈரப்பத அளவை 17 சதவீகிதத்தில் இருந்து 22 சதவீகிதமாக உயர்த்த மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்து உள்ளது. இதையடுத்து இதற்கான மத்திய குழு 23-ம் தேதி தமிழகம் வர உள்ளதாகவும், அந்த குழு 24 ஆம் தேதி முதல் தஞ்சை திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like