டெல்லி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் கர்னாலில் தடம் புரண்டது..!
டெல்லியில் இருந்து நேற்று அமிர்தசரஸ் நோக்கிச் சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 4:40 மணியளவில், கர்னாலில் உள்ள தாராவாரி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
“எட்டுப் பெட்டிகள் தடம் புரண்டன. இரண்டு சக்கரங்கள் கழன்றுவிட்டன. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது,” என்று கர்னால் காவல் ஆய்வாளர் தினேஷ் தெரிவித்தார்.
“டெல்லி-அம்பாலா ரயில் பாதையில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த மாதத் தொடக்கத்தில் ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத் ரயில் நிலையம் அருகே நிலக்கரி ஏற்றப்பட்ட சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது என்பது குறிப்பிடத்தக்கது