1. Home
  2. தமிழ்நாடு

துண்டுச்சீட்டு ஸ்டாலின்.. வைரலான போஸ்டர்! வழக்கு பதிவு செய்த  காவல்துறை!

துண்டுச்சீட்டு ஸ்டாலின்.. வைரலான போஸ்டர்! வழக்கு பதிவு செய்த  காவல்துறை!


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்கள் மீது சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்தும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவதூறு செய்யும் வகையிலும் கோவை மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு திமுக இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கோவை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யாமல், புகார் கொடுத்தவர்கள் மீதே கோவை காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதனை கண்டித்து, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோவையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், அதே போஸ்டர்கள் சென்னையில் பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்ட் சுரேஷ் தலைமையிலான நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

மேலும், இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் கவனத்திற்கு, உளவுபிரிவு போலீசார் தகவலை கொண்டு சேர்த்தனர்.

இதனையடுத்து, மு.கஸ்டாலின் மீது அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்கள் மீது பள்ளிக்கரணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like