1. Home
  2. தமிழ்நாடு

சிக்குகிறாரா தீபிகா படுகோனே.. செல்போன்களை பறிமுதல் செய்து போதை தடுப்புபிரிவு விசாரணை !

சிக்குகிறாரா தீபிகா படுகோனே.. செல்போன்களை பறிமுதல் செய்து போதை தடுப்புபிரிவு விசாரணை !


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது காதலி ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார்.

நடிகை ரியாவிடம் விசாரணை நடத்தியப்போது போதைப்பொருளை பயன்படுத்தியது மற்றும் தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடிகை ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார்.

சிக்குகிறாரா தீபிகா படுகோனே.. செல்போன்களை பறிமுதல் செய்து போதை தடுப்புபிரிவு விசாரணை !

மேலும், இந்த விசாரணையின் போது நடிகைகளான ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, இந்தி நடிகைகள் சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணைக்கு பிறகு தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங், கரிஷ்மா பிரகாஷ், ஆடை வடிவமைப்பாளர் சிமோன் கம்பட்டா மற்றும் சுஷாந்தின் திறன் மேலாளர் ஜெயா ஷா ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது அவர்களின் செல்போன்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதில் உள்ள வாட்ஸ் அப் உரையாடல்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்க உள்ளனர்.

தற்போது விசாரணை வளையத்தில் உள்ள நடிகர்-நடிகைகள் யாரும் போதைப்பொருள் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்படவில்லை என்றும், விசாரணை மட்டுமே நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like