1. Home
  2. தமிழ்நாடு

திரையரங்குகளை திறக்க வழி வகுத்தது தீபாவளி! டி.ராஜேந்தர் கருத்து !

திரையரங்குகளை திறக்க வழி வகுத்தது தீபாவளி! டி.ராஜேந்தர் கருத்து !


வரும் தீபாவளி திருநாள், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை திறக்க வழி வகுத்துள்ளதாக திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

திரையுலகை திக்குமுக்காட வைத்தது பல வலி, திரையரங்குகளை திறக்க வழி வகுத்தது தீபாவளி, திரையுலகினரின் வாழ்வில் தெய்வ அருளால் வீசட்டும் தீப ஒளி என திரைப்பட திரைப்பட இயக்குநரும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவருமான டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் நவம்பர் 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், இது தொடர்பாக டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் திரையரங்குகளை நவம்பர் 1-ம் தேதி முதல் 50 சவீதம் இருக்கைகளுடன இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

திரையுலகை திக்குமுக்காட வைத்தது பல வலி, திரையரங்குகளை திறக்க வழி வகுத்தது தீபாவளி, திரையுலகினரின் வாழ்வில் தெய்வ அருளால் வீசட்டும் தீப ஒளி என திரைப்பட திரைப்பட இயக்குநரும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவருமான டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், திரைத்துரையினரின் வாழ்வில் ஓளி வீச வழி வகுத்து தமிழக திரையுலகிற்கு நம்பிக்கை ஒளி ஏற்றிய ஒளிவிளக்கு புரட்சித் தலைவர் வழி வந்த தமிழக அரசுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் மற்றும் ஏனைய அனைத்து தமிழக அமைச்சர்களுக்கும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார்

Trending News

Latest News

You May Like