1. Home
  2. தமிழ்நாடு

சிறு கவனக்குறைவால் பலியான உயிர்..! பேருந்து சக்கரத்தில் சிக்கி டிரைவர் உயிரிழப்பு..!

1

கோவையை சேர்ந்தவர் கருப்பசாமி (25). தனியார் பேருந்து ஓட்டுநரான இவர், நேற்று முன்தினம் காலை பேரூரில் இருந்து பீளமேடு பாலிடெக்னிக் வரை செல்லும் தனியார் பேருந்தை ஓட்டிச் சென்றார். அன்று இரவு 9.30 மணி அளவில் அவர் பேரூர் - சிறுவாணி ரோடு பச்சாபாளையம் அருகே தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு கொண்டு வந்து தனியார் பேருந்தை நிறுத்தினார். அங்கு மேலும் 2 தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்தன.

dead

இரவு பேருந்தை நிறுத்தியதும் தனியார் பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் கண்டக்டர்கள் அங்கேயே படுத்து தூங்கி உள்ளனர். இதில் டிரைவர் கருப்பசாமி தான் ஓட்டி வந்த தனியார் பேருந்தின் கீழே பாய் விரித்து படுத்து தூங்கினார். நேற்று காலையில் ஓட்டுநர் மற்றும் கண்டக்டர்கள் எழுந்தனர். அப்போது கருப்பசாமியையும் எழுப்பி விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் அசந்து தூங்கியதாக தெரிகிறது.

இதற்கிடையே மற்ற தனியார் பேருந்து ஓட்டுநர், கண்டக்டர்கள் குளித்து தயாராகி பணிக்கு புறப்பட்டனர். அதில் காலை 6.10 மணிக்கு ஒரு தனியார் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதையடுத்து கருப்பசாமி ஓட்டும் தனியார் பேருந்தை நேற்று ஓட்ட வேண்டிய மற்றொரு டிரைவர் சூர்யா அங்கு வந்தார். அப்போது கண்டக்டர் மகேஷ்குமார் தன்னிடம் இருந்த டிக்கெட்டுகளை சரி பார்த்துக் கொண்டு இருந்ததாக தெரிகிறது.

Perur PS

இதற்கிடையே டிரைவர் சூர்யா, பேருந்துக்கு கீழே கருப்பசாமி படுத்து இருப்பதை கவனிக்காமல் பேருந்தை முன்னோக்கி இயக்கினார். அப்போது பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய கருப்பசாமி கண் இமைக்கும் நேரத்தில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாகஉயிரிழந்தார். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள், டிரைவர் சூர்யாவை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like