இப்படி ஒரு மருமகளா..?மாமியாருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்களை பரிசாக அளித்த மருமகள்..!

மாமியார் மருமகள் இடையேயான மோதல் குறித்துப் பல சம்பவங்களை நாம் கேள்விப்பட்டு இருப்போம். பல விஷயங்களை நாம் பார்த்தே கூட இருக்கலாம். ஆனால், நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் நீங்கள் நினைத்துப் பார்க்காத ஒரு விஷயம் நடந்துள்ளது. அங்கு மாமியாருக்கு மருமகள் கொடுத்த கிப்ட்டை பார்த்தால் நிச்சயம் ஒரு நொடி நீங்கள் ஸ்டன் ஆகிவிடுவீர்கள்.. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுகேஷ்.. இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீரங்கநாயகி என்பவருக்கும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடந்தது. கல்யாணத்திற்குப் பிறகு எல்லாரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாகவே வசித்து வந்துள்ளனர். இந்தச் சூழலில் தான் சுகேஷின் தாயார் பவானிக்கு 50ஆவது பிறந்த நாள் வந்துள்ளது.
தனது மாமியாரின் 50வது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாட முடிவு செய்த ஸ்ரீரங்கநாயகி அட்டகாசமான ஏற்பாடுகளைச் செய்து இருக்கிறார். மாமியார் பிறந்த நாளுக்கு உற்றார் உறவினர்களை அழைத்து பிரம்மாண்ட விழா நடத்தியிருக்கிறார். மாமியார் வீட்டின் உள்ளே கால் அடி எடுத்து வைத்த உடன் பூக்கள் தூவி வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், கலர் கலர் புஸ்வானமும் ஒளிர மாமியார் ஒரு நொடி வாயடைத்துப் போய்விட்டார். அதன் பிறகு பவானியை மேடை ஏற்றி கேக்கையும் வெட்ட வைத்துள்ளார் ஸ்ரீரங்கநாயகி.
தனது மாமியாருக்கு அதற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளைக் கொடுத்து அசத்தியிருக்கிறார். 50ஆவது பிறந்த நாளை கொண்டாடும் மாமியாருக்கு, 50 லட்சத்து 50 ஆயிரத்து 50 ரூபாய் பணத்தை ரொக்கமாக கொடுத்திருக்கிறார் ஸ்ரீரங்கநாயகி.
ராஜோலு நகர சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவரான காசு சீனிவாசின் மனைவி பவானிக்கு, அங்குள்ள ஆரிய வைசிய சங்கத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவின் போது, ஸ்ரீரங்கநாயகி, தலா 100 கிராம் எடையுள்ள இரண்டு தங்க பிஸ்கட்டுகள், 28 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ்,50 லட்சத்து 50 ஆயிரத்து 50 ரூபாய் 50 காசுகள் ஆகியவற்றை வழங்கினார்.
மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கியுள்ளார். இதை எல்லாம் பார்த்து மாமியார் பாவனி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய்விட்டார். பிறந்த நாள் விழாவுக்கு வந்தவர்களும் கூட இதை வியந்து பாராட்டினர்.