1. Home
  2. தமிழ்நாடு

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம்!!

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம்!!


புரட்டாசி மாதம் புண்ணியம் மிகுந்ததாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுக்க விரதங்கள், வழிபாடுகள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கம். நாளை புரட்டாசி மாதம் துவங்க இருக்கிறது. பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் விஷ்ணு ஆலயங்களில் கூட்டம் அலைமோதும்.

பொதுவாக இந்துக்கள் அனைத்து சனிக்கிழமைகளிலும் விரதம் இருப்பது வழக்கம். அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருந்தால் அதே பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். எனவேதான், புரட்டாசி மாதத்தை விரத மாதம் என்று அழைப்பதுண்டு. அதிலும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம். இதில் புரட்டாசி சனிக்கிழமைக்கென்று ஒரு விசே‌‌ஷம் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமையில்தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான பெருமாளை வணங்குவது வழக்கத்தில் வந்தது. 

இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் நம்பெருமாள் வழிபாட்டிற்கு  சனிக்கிழமைகளில்  வரும் பக்தா்கள் ஆன்லைன் முன்பதிவு செய்த பிறகே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், அதிக பக்தா்கள் வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாகவும்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தா்கள் தரிசனம் செய்ய காலை 6.30 - 8 மணி வரை, 8 - 10 மணி வரை, 10 - 12 மணி வரை, 12 - 2 மணி வரை, 2- 4.30 மணி வரை, மாலை 6 - 8 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வருகிற 26-ந்தேதி மட்டும் மாலை 4.30 மணிக்கு மேல் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 

பக்தா்கள் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.srirangam.org-ல் செய்து கொள்பவர்கள் மட்டுமே, சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like