ஆதவ் அர்ஜுனா மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு..!
தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் இலங்கையிலும் நேபாளத்திலும் GenZ புரட்சி உருவானது போல் தமிழ்நாட்டிலும் புரட்சி உருவாக வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த புரட்சி மூலம் பல பேரை அடித்து விரட்ட வேண்டும், பயங்கரமான எழுச்சியாக இருக்க வேண்டும் இங்கு உள்ளவர்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மிகவும் பதற்றம் நிறைந்த இந்த சூழலில் இளைஞர்களை தூண்டிவிட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியில் ஆதவ் அர்ஜுனா ஈடுபடுவதாக விமர்சனங்கள் எழுந்தன. எனவே ஆதவ் அர்ஜுனாவை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.
தனக்கு எதிராக விமர்சனங்கள் அதிகரிக்கிறது என்பதை உணர்ந்த ஆதவ் அர்ஜுனா அந்த ட்விட்டர் பதிவை நீக்கினார். இருந்தபோதும் மதுரையில் உள்ள வழக்கறிஞர்கள் அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி காவல்துறையில் புகார் அளித்தனர். சமூக வலைதளங்களிலும் பலர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இதனால் ஆதவ் அர்ஜுனா மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவர் மீது எடுக்கப்படும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.png)