வாடிக்கையாளர்கள் ஷாக்..! திடீரென கட்டணத்தை உயர்த்திய ஜியோ..!
ஜியோ தனது பயனாளர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுத்து வருகின்றது.
அதாவது அண்மையில் 249 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்திருந்தது. அதனைப் போலவே தற்போது 799 ரூபாய் ரீசார்ஜ் (84 நாள்கள் வேலிடிட்டி) பிளானை நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதே பிளான் Jiosaavan Pro சப்ஸ்கிரைப்சனுடன் தற்போது 899 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் மாதத்தில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணங்களும் 15 முதல் 20% வரை உயரும் என கூறப்படுகிறது. இந்தச் செய்தி வாடிக்கையாளர்கள் மத்தியில் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.