நாளை முதல் ஊரடங்கு தளர்வு! முக்கிய அம்சங்கள் என்னென்ன?
கொரோனா வைரஸால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் தளர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் அதன் சாதக, பாதகங்கள், நடைமுறைச் சிக்கல்கள் குறித்து பார்க்கலாம்.
வேளான் மற்றும் தோட்ட தொழில்கள் செயல்பட்டாலும், அவர்கள் முழுநேர சந்தைப் படுத்தலில் ஈடுபடுவது கேள்விக்குறிதான். குறிப்பாக ஹாட்ஸ்பாட் பகுதிகள் வழியாக வாகனங்கள் செல்ல முடியாது. தோட்டத்தொழிலாளர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாக இருப்பதால், அவர்கள் அரசு பேருந்துகளில் தான் செல்வார்கள். பேருந்துகள் இல்லாமல் செல்வது கடினம். உரிமையாளர்கள் வாகனங்கள் வைத்து அழைத்துச்சென்றாலும், பலர் ஒரே வண்டியில் செல்ல முடியாது.
மீன்பிடித் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், இது மீன்பிடித் தடைக்காலம் என்பதால் அவர்களுக்கு பலன் இல்லை.
கட்டடத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் அவர்கள் தொழிலுக்கான பொருட்களை வாங்க வழியில்லை.
பிளம்பெர் வேலை செய்பவர் எங்கே பொருட்களை வாங்குவார் ? எலக்ட்ரிசியன் வேலை செய்பவர் எங்கே பொருட்களை வாங்குவார் ? என்ற கேள்வி எழுகிறது.
அலுவலங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம், ஆனால் சொந்தமாக வாகனம் இல்லாதவர்களுக்கு சிக்கல் ? இவ்வாறு பல நடைமுறை சிக்கல்களும் வரும் என சமூக கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இப்படி பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் ஊரடங்கு தளர்வு என்பது உண்மையில் பயனுள்ளதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
newstm.in