அர்ஜெண்டினாவில் ஊரடங்கை மேலும் நீட்டித்து அறிவிப்பு!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்க உத்தரவை வரும் மே மாதம் 10ம் தேதி வரை நீட்டிப்பதாக அர்ஜெண்டினாவின் அதிபர் ஆல்பெர்டோ பெர்னாண்டஸின் அலுலவகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதலைத் தடுக்க அர்ஜெடினா நாட்டில் சென்ற மார்ச் மாதம் மத்தியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடையும் நிலையில், கொரோனா பரவுவதை தடுக்க வரும் மே மாதம் 10 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அதிபர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜெண்டினாவில் இதுவரை 3 ஆயிரத்து 780 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 185 பேர் உயிரிழந்துள்ளனர்.
newstm.in