1. Home
  2. தமிழ்நாடு

ஜூலை 31 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு !! அரசு அறிவிப்பு...

ஜூலை 31 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு !! அரசு அறிவிப்பு...


கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு , நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 5 லட்சத்தை நெருங்க இருக்கிறது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,637 ஆகவும் , சிகிச்சை பெறுபவர்கள் 189,463 , இறப்புகள் 15,301 ஆக உள்ளது.

மகாராஷ்ட்ரா , டெல்லி , தமிழகம் போன்ற மாநிலங்கள் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களாக உள்ளது. சில மாநிலங்கள் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு , நீடிக்கப்பட்டும் வருகிறது.

ஜூலை 31 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு !! அரசு அறிவிப்பு...

அதே போல் , மேற்கு வங்கத்திலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டது. மேற்குவங்கத்தை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் , ஊரடங்கு காலத்தில் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லூரிகள் செயல்படாது எனவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like