சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணிஅபார வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது.
இந்நிலையில் முதல் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து. அடுத்ததாக களமிறங்கிற சென்னை அணி தொடர் விக்கெட்டுகளை சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றும் 201 ரன்கள் எடுத்தால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம் என சென்னை அணி களமிறங்கியது. ஆனால், தொடக்கம் முதலே RCB அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் 191/6 ரன்கள் எடுத்தது. இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற RCB பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. CSK நடப்பு ஐபில் தொடரிலிருந்து வெளியேறியது.