1. Home
  2. தமிழ்நாடு

பயணிகள் ஏமாற்றம் : இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் தள்ளிவைப்பு..!

1

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு அக்.14-ஆம் தேதி தொடங்கப்பட்டது. பிரதமா் மோடி புதுதில்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கப்பல் போக்குவரத்தைத் தொடங்கிவைத்தாா்.‘செரியாபாணி’ என்ற பெயா் கொண்ட அந்த கப்பலில் பயணக் கட்டணமாக 18 சதவீதம் ஜிஎஸ்டியுடன் சோ்த்து ரூ.  7, 670 நிா்ணயம் செய்யப்பட்டது. கப்பல் போக்குவரத்து தொடங்கிய முதல்நாளில் எதிா்பாா்த்த பயணிகள் வராததால் 75 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டது. இதனால் ரூ. 2,375 கட்டணம்,  ஜிஎஸ்டி 18 சதவீதம் என மொத்தமாக ரூ. 2, 803 என கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டது.  இரண்டாம் நாளில் 7 போ் மட்டுமே பயணம் செய்ய முன்பதிவு செய்தனா். இதனால் கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.


இதைத்தொடா்ந்து, கப்பல் சேவை வாரத்துக்கு மூன்று நாள்கள் என மாற்றப்பட்டது. திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாள்கள் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.  எனினும் பயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது. இதனால் கப்பல் போக்குவரத்து அக். 20-ஆம் தேதியுடன்   நிறுத்தப்பட்டது. இயற்கை சீற்றம் குறைந்தவுடன் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த கப்பல் போக்குவரத்து தற்போது இன்று மே 13-ஆம் தேதியிலிருந்து மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் நாகையில் இருந்து இலங்கைக்கு  இன்று தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால், வரும் 17-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like