1. Home
  2. தமிழ்நாடு

7 வயது சிறுவனை 10 மாதங்களாக இரும்புச் சங்கிலியில் கட்டி வைத்த கொடுமைக்கார சித்தி!!

7 வயது சிறுவனை 10 மாதங்களாக இரும்புச் சங்கிலியில் கட்டி வைத்த கொடுமைக்கார சித்தி!!


வங்கதேசத்தின் அஷுலியா பகுதியில் வாடகை வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட 7 வயது சிறுவன், காவலர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கண்ணீருடன் விவரித்துள்ளான்.

அஷுலியா பகுதியைச் சேர்ந்த பரிசல் தொழில் செய்யும் கூலித்தொழிலாளியின் மகன் சித்தி வளர்ப்பில் வாழ்ந்து வந்துள்ளார். வீட்டிலிருந்து அடிக்கடி அலறல் சத்தம் கேட்பது குறித்து அக்கம்பக்கத்தினர் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் வீட்டிற்குச் சென்று சிறுவன் ஒருவனை மீட்டது காவல்துறை. சிறுவனின் உடல் முழுவதும் கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் அடித்த தழும்புகள் அதிகளவில் காணப்பட்டுள்ளன. சிறுவனிடம் விசாரித்த போது, தனது சித்தி, நாள்தோறும் தன்னை இரும்புச் சங்கிலியால் பிணைத்து விடுவார் என்றும், அதற்கு மறுத்தால் குச்சி அல்லது துடைப்பத்தால் தன்னை அடித்து, கழுத்தை  நெறித்துக் கொலை செய்ய முயல்வார் எனவும் அந்த சிறுவன் கூறியுள்ளான்.

இந்நிலையில் சிறுவனை கொடுமைப்படுத்திய சித்தி மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பவம் குறித்து தந்தை மற்றும் சித்தி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
 

Trending News

Latest News

You May Like