1. Home
  2. தமிழ்நாடு

ஆற்று வெள்ளத்தில் முதலை நடமாட்டம்! அச்சத்தில் பொதுமக்கள்!!

ஆற்று வெள்ளத்தில் முதலை நடமாட்டம்! அச்சத்தில் பொதுமக்கள்!!


திருச்சி திருவெறும்பூரை அடுத்த காட்டூரில் உள்ள கவுற்றாற்றில் முதலை நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தொடர் மழை காரணமாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கவுற்றாறு என்றழைக்கப்படும் காட்டாற்றில் வெள்ள பெருக்கெடுத்து ஓடுகிறது. காட்டூர் பாலாஜி நகர் குடியிருப்பு வழியாக செல்லும் இந்த காட்டாற்றில் தற்போது முதலையின் நடமாட்டத்தை அவ்வழியே சென்றவர்கள் பார்த்துள்ளனர்.

அதனை செல்போனில் வீடியோ எடுத்து அப்பகுதியில் உள்ள வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தனர். இதனால் பாலாஜி நகரில் உள்ள குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஆற்றின் கரையில் குடியிருப்போர் மற்றும் கரை வழி சாலையை பயன்படுத்துபவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆற்று வெள்ளத்தில் முதலை நடமாட்டம்! அச்சத்தில் பொதுமக்கள்!!

முதலை நடமாட்டம் தெரிந்தால் உடனே வனத்துறைக்கோ அல்லது தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு நகர் நலசங்க நிர்வாகிகள் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர். தேங்கி நிற்கும் மழைநீரில் பாம்புகள் ஒரு பக்கம் அச்சத்தை ஏற்படுத்தி வரும் வேளையில், முதலை நடமாட்டம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like