1. Home
  2. தமிழ்நாடு

வீட்டில் பதுக்கப்பட்ட பட்டாசு வெடித்து சிதறியதில் தம்பதி பலி.. தரைமட்டமான வீடு !

வீட்டில் பதுக்கப்பட்ட பட்டாசு வெடித்து சிதறியதில் தம்பதி பலி.. தரைமட்டமான வீடு !


புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் புதுக்குளம் அந்தோணியார் வீதியை சேர்ந்த நெப்போலியன். தனது வீட்டிலேயே உள்ள குடோனில் பட்டாசுகளை இருப்பு வைத்துள்ளார். மேலும் பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு அவர் அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இப்பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென்று வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் நெப்போலியன் வீடும் இடிந்து தரை மட்டமானது.

அப்போது வீட்டில் இருந்த நெப்போலியன், அவரது மனைவி பத்மா விபத்தில் சிக்கி உயிருக்கு போராடினர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், போலீஸார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர்கள் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.


வீட்டில் பதுக்கப்பட்ட பட்டாசு வெடித்து சிதறியதில் தம்பதி பலி.. தரைமட்டமான வீடு !
நெல்போலியன் - பத்மா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த வெடிவிபத்து சம்பவம் நடந்த நேரத்தில் நெப்போலியனின் 2 மகள்களும் வெளியே சென்றிருந்ததால் அவர்கள் உயிர் தப்பினர்.

வீட்டில் பதுக்கப்பட்ட பட்டாசு வெடித்து சிதறியதில் தம்பதி பலி.. தரைமட்டமான வீடு !

இதேபோல், விருதுநகர் அருகே குந்தலப்பட்டியில் இயங்கும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. அங்கு மருந்து கலவை அறையில் பட்டாசுக்கான மருந்துகளை தயாரித்தபோது உராய்வு ஏற்பட்டு திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. அதில், அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

இந்த விபத்தில் கிருஷ்ணகுமார் (55) தொழிலாளி படுகாயமடைந்தார். அவர் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தப்போதும், அவை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்த இரு விபத்துகள் குறித்தும் அப்பகுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like