1. Home
  2. தமிழ்நாடு

ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா தொற்று உறுதி ! -  டெல்லியில் தீவிர சிகிச்சை !

ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா தொற்று உறுதி ! -  டெல்லியில் தீவிர சிகிச்சை !


பாஜக தலைவர்களுள் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் அவரது தாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார். 

ஆனால் பல்வேறு காரணங்களை கூறி ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியிலிருந்து விலகியதோடு பாஜகவிலும் இணைந்துவிட்டார். 

இந்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியாவுக்குக் கடந்த நான்கு நாட்களாக கொரோனா அறிகுறிகள் இருந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

மருத்துவ பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா உறுதியானதால் தற்போது அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அவரின் தாயாரான மாதவி ராஜீ சிந்தியா கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாத போதும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

newstm.in 

Trending News

Latest News

You May Like